Friday, May 6, 2011

சிவவாக்கியர்

வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே? 194

வேடம் இட்டு மணி ஒலித்து தீபம் மிக்க தூபமும் காட்டி.. ஆடு அறுத்து கூறு போட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்.... தேடி வைத்த செம்பு பாத்திங்கள் எல்லாவற்றையும் திரள்படப் பரப்பியே.. பூக்கள் போட்டு பண்ணும் பூசை என்ன பூசை?

கருத்து: செய்யவேண்டி முறை தியானம் தானே.. அம்முறையே ஈசனை நாடுங்கள்..

No comments:

Post a Comment