Monday, May 2, 2011

சிவவாக்கியர்


பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?194

பிறந்த பொது கோவணம், பூணூல், குடுமியும் பிறந்தபோது உடன் வரவில்லை,
வேத மந்திரமும் நாலு வேதமும் பிறந்த பொது மனதில் உதிக்கவில்லை..
இவைகள் நம்முடம் உடன் பிறக்காமல் போனதால், பூமிதான் பிளந்ததோ, வானம்தான் இடிந்து வீழ்ந்ததோ?

மானிடரே எல்லாம் நாம் கற்று, உணர்ந்து, தெளிவதே.. முயற்சிகொள்..

No comments:

Post a Comment